search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரயு நதி"

    உத்தரப்பிரதேசத்தில் சரயு நதிக்கரையில் அமைக்கப்படவுள்ள பிரமாண்டமான ராமர் சிலையை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தீபாவளியில் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளார். #Ayodhya #LordRamarStatue #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி, பாபர் மசூதி அமைந்து இருந்த பிரச்சினைக்கு உரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்ற கேள்விக்கு இன்னும் இறுதி முடிவு ஏற்படவில்லை. இது தொடர்பான வழக்குகள், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் இழுபறி நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில், உ.பி.யின் சரயு நதிக்கரையில் அமைக்கப்படவுள்ள பிரமாண்ட ராமர் சிலையை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் திறந்து வைக்க உள்ளார்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், அயோத்தியில் சரயு நதிக்கரையில் மிக பிரமாண்டமாக 107 மீட்டர் உயரத்தில் (351 அடி) ராமர் சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலை 44 மீட்டர் (144 அடி) உயரம் உள்ள பீடத்தில் வைக்கப்படுகிறது. ஆக சிலை, பீடம் இரண்டும் சேர்ந்து மொத்த உயரம் 151 மீட்டர் (495 அடி) ஆகும்.



    இந்த சிலையை சரயு நதிக்கரையில் சரியாக எந்த இடத்தில் வைப்பது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ராமர் சிலை வெண்கலத்தில், டெல்லியை அடுத்த நொய்டாவை சேர்ந்த சிற்பியால் உருவாக்கப்படுகிறது. இந்த சிலையை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தீபாவளி பண்டிகையின்போது திறந்து வைக்கிறார்.

    சிலை வைக்கப்படுகிற இடத்தையொட்டி, அருங்காட்சியகம் ஒன்றை ஏற்படுத்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதில் ஒரு கலைக்கூடமும், கலை அரங்கமும் இடம் பெற்றிருக்கும்.

    அருங்காட்சியகம், கலைக்கூடத்தில் ராமபிரானின் ஒட்டுமொத்த வாழ்வு சம்பவங்களை விவரிக்கும் காட்சிகள் இடம் பெறும். கலையரங்கைப் பொறுத்தமட்டில் நாட்டின் பல்வேறு அமைப்புகளும் ‘ராம்லீலா’வை அரங்கேற்றுவதற்கு வாய்ப்பு உருவாக்கித் தரப்படும். கலையரங்கில் ‘லேசர்’ படக்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். #Ayodhya #LordRamarStatue #YogiAdityanath
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள ஆறுகளில் குறிப்பிட்ட அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. #JammuKashmir #Sarayu
    ஸ்ரீநகர்:

    வட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகள் மற்றும் அணைகளின் நீர்மட்டங்கள் வெகுவேகமாக அதிகரித்து வருகின்றன.

    உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், லட்சக்கணக்கிலான ஹெக்டேர் விளைநிலங்கள் சேதமாகியுள்ளன.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம்  ரஜோரி மாவட்டத்திலும் தற்போது கனமழை பெய்து வருகிறது. சமீபத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.



    இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். #JammuKashmir #Sarayu

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குறிப்பிட்ட அளவை தாண்டி சரயு நதி பெருக்கெடுத்து ஓடுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #Sarayu #Flood
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சரயு நதி ஓடுகிறது. சமீபத்தில் பெய்த கனமழையால் அயோத்யாவில் சரயு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆற்றில் தண்ணீர்ின் அளவு குறிப்பிட்ட அளவைத் தாண்டிசென்று கொண்டிருக்கிறது. சரயு ஆற்றில் சேமிக்கப்பட்டு வரும் நீரின் அளவும் 93 அடியை தொட்டுள்ளது. மேலும் நீரின் வேகமும் அதிகரிதத்துள்ளது.



    இதனால் சரயு ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தி உள்ளனர். #Sarayu #Flood

    ×